உலகளாவிய ரீதியில்
சுத்தமான நீரினை பெற்றுக்கொள்வது என்பது இன்று
பாரிய சவாலாக மாறியிருக்கின்றது. அதனால் உலகின் பாரிய அபிவிருத்தித்திட்டமிடல்கள் அனைத்திலும் நீர் என்ற விடையம் முதன்மைப்படுத்தியே நோக்கப்படுகின்றது. வெளிப்படையில்
இலங்கை போதிய நீர்வளம் கொண்ட நாடு போல் தோன்றினாலும் பருவகாலங்களுக்கு
ஏற்பவும் பிரதேச வேறுபாடுகளுக்கு ஏற்பவும் நீரினை பெற்றுக்கொள்வதில் பாரிய
சவால்கள் இலங்கையில் உண்டு என்பதும் மறுப்பதற்கில்லை. கிராமிய
மட்டங்களில் பாதுகாப்பான நீரினை பெறுவதில்...